அண்மைய செய்திகள்

recent
-

முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் சொந்த இடமான மன்னார் ஆண்டங்குளத்தில் அனுஸ்ரிப்பு-படங்கள் )

தாயக விடுதலைப்போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2 ஆம் லெப். மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (10) மாலை 3.30 மணியளவில் மன்னார் ஆண்டங்குளத்தில் நினைவு கூறப்பாட்டுள்ளது.

ஆண்டாங்குளத்தில் உள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் மாவட்ட இணைஞர் அணி அலுவலகத்தில், ஜனநாயக போராளிகள் கட்சியின் வடமாகாண இளைஞர் அணி தலைவர் சி.வேந்தன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது சுடர் ஏற்றப்பட்டு முதல் பெண் மாவீரர் 2 ஆம் லெப்.மாலதியின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.இதன் போது நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அப்பிரதேசத்தில் உள்ள போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களில் உள்ள வறுமைக்கோட்டிற்குற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஜனநாயக போராளிகள் கட்சியினரினால் பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் சொந்த இடமான மன்னார் ஆண்டங்குளத்தில் அனுஸ்ரிப்பு-படங்கள் ) Reviewed by NEWMANNAR on October 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.