அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் நடைபெற்ற இந்துமாநாட்டில் ஐவருக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பு....


மன்னார் மாவட்டதில் சர்வதேச இந்துஇளைஞர் பேரவையும்மன்னார் மாவட்ட  அறநெறிப்பாடசாலைகளின் இணையமும் இணைந்து  நடாத்திய இந்து மாநாட்டில் காலை மாலை நிகழ்வாக இந்துசமயத்தின் சிறப்புக்கள் பெருமைகள் அதன் தாற்பரியம் பின்பற்றப்படவேண்டிய விடையங்கள் மிகவும் சிறப்பான முறையில்  எடுத்துக்கூறப்பட்டது.
 .
மாலை நிகழ்வுகள்  முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் அரங்கில் தமிழ்நாடு பேரூர் ஆதினம் இளைய சந்நிதானம் தவத்திரு.மருதாச்சலம் அடிகளார் முன்னிலையில், சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இலங்கை கிளைத்தலைவர் சிவத்தமிழ் செல்வர் சிவ.கஜேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. 

இவ்நிகழ்வில் விருதாளர்களுக்கு பொன்னாடையும் சந்தனமாலையையும் உலகப்புகழ்பெற்ற சிறப்புப்பேச்சாளர் கலைமாமணி  சொல்வேந்தர் சுகி சிவம்,
  ஐயா அணிவிக்க சிற்ப்புவிருதினை தமிழ்நாடு பேரூர் ஆதினம் இளைய சந்நிதானம் தவத்திரு.மருதாச்சலம் அடிகளார்வழங்கி சிறப்புச்செய்தார்

தமிழுக்கும் இந்துசமயத்திற்கும் இசைக்கும் சமூகப்பணியாற்றிய ஐவருக்கு


  • திருவாளர் சிவசம்பு இராமகிஸ்ணன்(மன்னாரில் பல அமைப்புகளில் இணைந்து தமிழுக்கும் இந்துசமயத்திற்கும் சமூகமுன்னேற்றத்திற்கும் 40 ஆண்டுகள்  கடந்தும் சேவையாற்றி வரும் ஓய்வுபெற்ற பொறியியலாளர் ஆவார்)
  • திருவாளர் சுப்பிரமணியம் பிருந்தாவன நாதன்(மன்னாரில் பல அமைப்புகளில் இணைந்து தமிழுக்கும் இந்துசமயத்திற்கும் சமூகமுன்னேற்றத்திற்கும் 36 ஆண்டுகள்  கடந்தும் சேவையாற்றி வரும் சமூகசேவையாளர் ஆவார்)
  • திருவாளர் வீராசாமி அறிஹரபுத்திரன் 
  • கலாநிதி மறவன்புலவு க,சச்சிதானந்தம்
  • திருவாளர் சின்னத்துரை தனபாலா
 பெருந்த்கைகளுக்கு பொன்னாடை போர்த்தி மாலையணிவித்து விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 -வை-கஜேந்திரன்-








மன்னாரில் நடைபெற்ற இந்துமாநாட்டில் ஐவருக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பு.... Reviewed by Author on October 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.