அண்மைய செய்திகள்

recent
-

ஆத்துமாக்கள் திருநாள்.......02

ஆத்துமாக்கள் திருநாள்.......02

அன்புக்குரியவர்களை நினைப்பதும்
அனைவரும் கூடி செபிப்பதும்..புலம்புவதும்.
ஆண்டுக்கொரு முறை வருவதும்
ஆன்மாக்களின் திருவிழா......

கல்லறைகளில் இருந்து
சந்தனப்புகையும்..............
மெழுகுவர்த்தியும் எரிகிறது
கண்களில் இருந்து கண்ணீர் விழுகின்றது

சாந்தமும் அமைதியுமாய்
சத்தமின்றி கிடந்த இடம்-இன்று
சத்தமுமாய் சனப்புழக்கம்
சலசலப்புக்கள்.......................

காடாய்....... நாய்...... படுத்துக்கிடக்கும்
குப்பைகள் கூடி......
கல்லறைகள் பல வண்ணத்தில்....ஓ...ஓ...ஒ
கார்த்திகை இரண்டோ.......

கல்லாலும் பளிங்கு மாபிளாலும்
கட்டப்பட்ட கல்லறைகள்-பல
கட்டாந்தரையில் புல்லோடும்
கட்டையில் சிலுவையோடு கல்லறைகள்-பல

மாடிவீடும்.................
கோபுரமுமாய்......... உருவத்தில்
சிலைகளும்..........கல்லறைகள்-இலட்சம்
விலைகள்........

உயிரோடு இருக்கும் போது
ஒரு சோடி பணடோல்..........
ஒரு நேர உணவு......................
ஓரிரு அன்பான வார்த்தைகள்....
ஒற்றுமையில்லாமல் இருந்ததினால்....
இங்கே உறங்குபவர்கள் ஏராளம்.....

உயிரோடு இருக்கும் போது-இந்த
உலகில் ஒவ்வொருவருக்கும்-எத்தனை
உறவுப்படலம்-உயிர் நிண்டுபோனால்-நீ
உருவமற்ற சடலம்......உணராமல்......

சுடலை ஞானம்-பிறந்த இன்று
சும்மா இருந்த நண்பரிடம்-என்ன இங்க--அவர் இந்து நண்பர்
அம்மா இங்கதான்  துப்பரவு செய்யனும்
நீங்களுமா...என்கேள்விக்கு......

கடவுள் ஒன்றுதான்....நாம்
காணும் விதங்கள் வேறு.....
பிறக்கின்ற மனிதன் இறக்கத்தானே...வேண்டும்
பிறசமயத்தையும் மதிக்க வேண்டும்

அன்பும் இரக்கமும் நம்பிக்கையும்
அனைவரிடமும் சமமாய்-இருந்தால்
அகிலத்தில் சமத்துவமும் சமாதானமும்-நிலைக்கும்
ஆத்மாக்கள் திருநாள் அர்த்தமுள்ள ஒரு நாளாய் அமையும்...........

இருக்கும் போது கண்டுகொள்ளாமல் இருப்பதும்
இல்லாமல் போனபின்பு  துள்ளிக்குதிப்பதும்
இவ்வுலகில் வழமையப்பா...............................
இப்படியே போகுது வாழ்க்கையப்பா............

-வை-கஜேந்திரன்- 
ஆத்துமாக்கள் திருநாள்.......02 Reviewed by Author on November 02, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.