மன்.கட்டையடம்பன் றோ.க.த.பாடசாலைமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-(படம்)
மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கட்டையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கு மடு பொலிஸாரின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று புதன் கிழமை 22-11-2017பாடசாலையில் இடம் பெற்றுள்ளது.
வறுமை காரணமாக கல்வி கற்பதில் சிரமத்தை எதிர் கொண்டுள்ள மாணவர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் குறித்த மாணவர்களுக்கே கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மடு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளான பி.எஸ்.தயானந்த மற்றும் பி.சி.தேவப்பெரும ஆகியோர் வெண்ணப்புவ பகுதியைச் சேர்ந்த வர்த்தகரான ஆனந்தப் பெரேரா அவர்களின் நிதி உதவியின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட குறித்த உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
. பாடசாலையின் அதிபர் M.M. லூர்தாகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உற்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்.கட்டையடம்பன் றோ.க.த.பாடசாலைமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-(படம்)
Reviewed by Author
on
November 23, 2017
Rating:
No comments:
Post a Comment