அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையர் ஒருவர் தென்கொரியாவில் பரிதாபமாக உயிரிழப்பு! -


வீதிப் போக்குவரத்து தொடர்பான நிற சமிக்ஞைகளை கண்டு கொள்ளாத இலங்கையர் ஒருவர் தென்கொரியாவில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வீதிப் போக்குவரத்து சட்டங்களை மீறி குறித்த இலங்கையர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
தென்கொரியாவிற்கான இலங்கைத் தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

பாணந்துறையைச் சேர்ந்த குறித்த 31 வயதான நபர், சட்டரீதியாக கொரியாவிற்கு பணி நிமித்தம் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்துக்குள்ளான போது செலுத்திய மோட்டார் சைக்கிளிற்கும், மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞருக்கும் அனுமதிப்பத்திரம் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.

வாகனத்தை நிறுத்துமாறு சமிக்ஞை பிறப்பிக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஏற்பட்ட மருத்துவ செலவுகள் இலங்கைப் பெறுமதியில் 42 லட்சம் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.

வீதிப் போக்குவரத்து சட்டங்களை மீறி வாகனத்தைச் செலுத்தியதனால் உயிரிழந்தவருக்கு காப்புறுதி நட்டஈடு வழங்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையர் ஒருவர் தென்கொரியாவில் பரிதாபமாக உயிரிழப்பு! - Reviewed by Author on November 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.