அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையம் திறந்து வைப்பு-(photos)

வடமாகாண தொழிற்திணைக்களத்தின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையம் இன்று புதன் கிழமை (15-11-2017)  மதியம் மன்னாரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதான பாலத்தடி, பெரியகடை பகுதியில் அமைக்கப்பட்ட குறித்த உள்ளூர்; உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையத்தை வடமாகாண மகளீர் விவகாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் குறித்த விற்பனை நிலையத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

இதன் போது வடமாகாண தொழிற்திணைக்கள பணிப்பாளர் உஸா சுவலிங்கம், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமேல்,வடமாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி பா.டெனிஸ்வரன், அலிக்கான் சரீப் உற்பட தொழிற்திணைக்கள பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










மன்னாரில் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலையம் திறந்து வைப்பு-(photos) Reviewed by Author on November 15, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.