அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இடம் பெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு-(படம்)

சூனாமிப் பேரலையினால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட கலை இலக்கிய பண்பாட்டு கழகத்தின் இயக்குனர் மோகன் ராஜ் தலைமையில் மன்னார் பிரதான பாலத்தடி கடலேரி பகுதியில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.

-இதன் போது கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.

குறித்த அஞ்சலி நிகழ்வில்  தீபம் ஏற்றப்பட்டு மலர் தூவி உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் போது அருட்தந்தை நேரு அடிகளார்,  வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.











மன்னாரில் இடம் பெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு-(படம்) Reviewed by Author on December 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.