அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் மேற்குபுனிதலோறன்வியார் தேவாலயத்தில்....பொங்கல் நிகழ்வு


தலைமன்னார் மேற்குபுனிதலோறன்சியார் தேவாலயத்தில் இளைஞர் யுவதிகளினால் 14.01.2018 அன்று காலைவெகுவிமர்சையாக பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது.
அன்றையதினம் 20 அடிநீளமான கோலமிட்டுஆலயவளாகத்தை அழகுபடுத்தியிருந்தனர்.
முதலில் பொங்கல் பொங்குவதற்காகதெரிவு செய்யப்பட்ட குடும்பம் அடுப்பு மூட்டிபானையில் அரிசியிட்டுபொங்கலைப் பொங்கி தமது பணியினைவெகுசிறப்பாகசிறப்பித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து பண்பாட்டுத் திருப்பலி இடம்பெற்றது.
திருப்பலி நிறைவில் பங்குத் தந்தை நவரட்ணம் அடிகளாரினால் பொங்கல் ஆசீர்வதிக்கப்பட்டு இளைஞர் யுவதிகளினால் மக்களுக்குபகிர்ந்தளிக்கப்பட்டது.
மக்கள் அனைவரும் தமக்குள் பொங்களைப் பகிர்ந்து இத்திருவிழாவை மகிழ்வுடன் கொண்டாடியமையைகாணக்கூடியதாக இருந்தது.










தலைமன்னார் மேற்குபுனிதலோறன்வியார் தேவாலயத்தில்....பொங்கல் நிகழ்வு Reviewed by Author on January 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.