CSK எடுக்கவில்லை என்றாலும் நான் தமிழன்டா! ஐபிஎல் போட்டி குறித்து அஸ்வின்
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் இந்தாண்டு வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான வீரர்களின் ஏலம் சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்றது.
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்த இந்திய அணியின் சுழற்பந்து அஸ்வின் இந்த ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடவுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த அவர் சென்னை அணிக்கு விளையாடாதது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஐபில் போட்டி குறித்து அஸ்வின் கூறுகையில், ”இந்தாண்டிற்கான ஏலத்தில் சென்னை அணி என்னை எடுக்காதது கவலையாகத் தான் உள்ளது.
சேப்பாக்கின் ஒவ்வொரு பக்கத்தையும் நான் ஆக்கிரமித்துள்ளேன். ஒவ்வொரு முறை இங்கு நடக்கும் போட்டிகளின் போதும் ரசிகர்களின் ஆக்ரோஷமான உற்சாக குரல் என் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கும்.
எனது திறமையை என் சொந்த மக்கள் முன் மீண்டும் நிரூபிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் இம்முறை பஞ்சாப் அணியின் உடையில். இருந்தாலும் நான் எப்போதும் தமிழன் தான், நான் 100 சதவீத முயற்சியுடன் போராடுவேன். இம்முறை லெக் ஸ்பின் முறையில் எதிரணி வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளேன்” என கூறியுள்ளார்.
CSK எடுக்கவில்லை என்றாலும் நான் தமிழன்டா! ஐபிஎல் போட்டி குறித்து அஸ்வின்
Reviewed by Author
on
February 07, 2018
Rating:
No comments:
Post a Comment