அண்மைய செய்திகள்

recent
-

வங்கதேச போட்டியில் அசத்திய தமிழனை புகழ்ந்து தள்ளிய ரோகித் சர்மா -


வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அசத்திய வாஷிங்டன் சுந்தரை, அணியின் தலைவர் ரோகித் சர்மா புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இலங்கையில் தற்போது முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் வங்கதேச அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்கள் வீசி 22 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

இந்நிலையில் இந்திய அணியின் தலைவரான ரோகித் சர்மா, போட்டியில் நாங்கள் 10 முதல் 15 ஓட்டங்கள் குறைவாக எடுத்துவிட்டோம். கடைசி கட்ட ஓவரில் வங்கதேச வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர்.
இருப்பினும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். அதிலும் குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சு தொடக்கத்திலே ஒரு மாயாஜாலமாக இருந்தது.
புதிய பந்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுவது அவ்வளவு எளிதான விடயம் அல்ல, ஆனால் வாஷிங்டன் அதை சிறப்பாகவே செய்தார் அவருக்கு ஹேட்ஸ் ஆப் என்று கூறியுள்ளார்.
மேலும் வாஷிங்டன் சுந்தர் பந்தை தூக்கி வீசுவதிலும் தைரியமானவர். தான் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவானவர் என்றும் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
வங்கதேச போட்டியில் அசத்திய தமிழனை புகழ்ந்து தள்ளிய ரோகித் சர்மா - Reviewed by Author on March 15, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.