ராஜிவ் காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு பரோல் -
தன்னை ஒரு மாத காலம் பரோலில் செல்ல அனுமதி அளிக்கக்கோரி ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.
இதன்போது ரவிச்சந்திரனுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதித்து 2 வாரம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இவர்கள் 7 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு மேல் சிறையில் இருந்து வருகின்றனர்.
அண்மையில் பேரறிவாளனுக்கு இரு மாதங்களுக்கு பரோல் வழங்கப்பட்டது.
அதுபோல் நளினியும் தனது மகள் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் கேட்டும் இன்னும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சொத்து பிரச்சினை காரணமாக தனக்கு ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் ரவிச்சந்திரன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி விமலா - நீதிபதி கிருஷ்ணவள்ளி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது இன்று வரை ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இன்று ரவிச்சந்திரனுக்கு 2 வாரம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு பரோல் -
Reviewed by Author
on
March 02, 2018
Rating:
No comments:
Post a Comment