அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவில் பள்ளி மைதானத்தில் தூக்கில் தொங்கிய மாணவி -


பிரித்தானியாவில், இந்திய வம்சாவளி மாணவி ஒருவர் தனது பள்ளி மைதானத்தில், தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் லண்டன் நகரில் உள்ள Henrietta Barnett எனும் பள்ளியில் படித்து வந்த இந்திய மாணவி Elena Mondal.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான Elena, கடந்த வாரம் தன்னுடன் படிக்கும் தோழிகளிடம் தன்னையும் வாட்ஸ் அப் குரூப்பில் சேர்க்கும்படி கோரியுள்ளார்.

ஆனால், அம்மாணவிகள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், Elena மிகுந்த மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பள்ளி மைதானத்தில் Elena தூக்கில் சடலமாக தொங்கியதைப் பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், Elena அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது மற்றும் சுய தீங்கு விளைவித்துக் கொள்வது என மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும்,
அதற்காக மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. ஆனால், சிகிச்சைக்கான வகுப்புகளை Elena பலமுறை புறக்கணித்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பொலிசார் அடுத்தகட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரித்தானியாவில் பள்ளி மைதானத்தில் தூக்கில் தொங்கிய மாணவி - Reviewed by Author on March 31, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.