அண்மைய செய்திகள்

recent
-

100 கோடிக்கு அதிபதி: துறவியாக மாறிய கோடீஸ்வரர் -


இந்தியாவில் கோடீஸ்வர வாழ்க்கையை விட்டு 24 வயது இளைஞன் ஒருவர் சமண துறவியாக மாறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்தவர் மோக்சேஷ், சார்ட்டட் அக்கவுண்ட் படித்துள்ள அவர் பிரபல ஆடிட்டராக இருந்து வந்தார்.
தொழிலதிபர்களான இவரது பெற்றோர் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் அளவில் வியாபாரம் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
ஜேகே கார்ப்பரேஷன் என்ற பெயரில் இயங்கும் அந்த நிறுவனங்களில் பேக்கிங் செய்ய உதவும் காகிதங்கள், தெர்மாக்கோல் உள்ளிட்ட பொருட்களைத் தயாரித்து மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் விநியோகம் செய்து வருகின்றனர்.
இதைத் தவிர்த்து இவர்கள் வைர வியாபாரமும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மோக்சேஷ் சமீபகாலமாக சமண மதத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து சமண மதத் துறவியாக மாற முடிவு செய்துள்ளார்.
இது குறித்து பெற்றோர்களிடம் கூறிய போது அவர்கள் முதலில் அனுமதி தரவில்லை. அதன் பின் ஒரு ஆண்டுகளுக்கு பின் மகனின் ஆசை நிறைவேற்றுவதே சிறந்தது என்று கூறி அவரின் ஆசையை நிறைவேற்றுவதாக கூறியுள்ளனர்.
இதனால் நேற்று முன்தினம் இவரை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். அதன் பிறகு சமண மதத் துறவிகள் இவருக்கு தீட்சை அளித்தனர்.
இது குறித்து மோக்சேஷ் கூறுகையில், பணத்தால் எதையும் வாங்க முடியும் என்றால், பணக்காரர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழலாம்.
ஆனால் நிஜத்தில் அப்படி இருப்பதில்லை. ஆனால் எப்போதும் மகிழ்ச்சியைப் பெறுவது என்பது ஒன்றைப் பெறுவது அல்ல, நம்மிடம் இருப்பதை விட்டுவிடுவதைத்தான் நித்திய மகிழ்ச்சி என்று சொல்கிறோம்.
நான் சிஏ படித்து முடித்த பிறகு 2 ஆண்டுகள் எனது தந்தையின் வணிகத்தைக் கவனித்தேன், அதில் எனக்கு எந்த ஒரு மகிழ்ச்சியும் கிடைக்கவில்லை, இதன் காரணமாகவே சமண மதத் துறவியாகிவிட்டேன் என்று கூறியுள்ளார்.
100 கோடிக்கு அதிபதி: துறவியாக மாறிய கோடீஸ்வரர் - Reviewed by Author on April 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.