அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் மக்களுக்கு காணிகள் வழங்கும் நிகழ்வு! -


தலைமன்னாரில் காணியற்று இருக்கும் மக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து காணிகள் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளதுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால் இந்த காணிகள் பெற்றுக்கொண்டுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, தலைமன்னார் மக்களிடம் காணிகளுக்கான உறுதிப் பத்திரங்களை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன,மத வேறுபாடின்றி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இந்த காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளர் றிப்கான் பதியுதீன், மன்னார் பிரதேச சபை உறுப்பினர்களான

எஸ்.எச்.எம்.முஜாஹிர், செய்யது அலி முகம்மது நயீம் மற்றும் இலங்கை சட்டஉதவி ஆணைக்குழுவினர், காணி சீர்திருத்த ஆணைக்குழுவினர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
தலைமன்னார் மக்களுக்கு காணிகள் வழங்கும் நிகழ்வு! - Reviewed by Author on April 05, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.