விஞ்ஞானிகள் நடத்திய ஆழ்கடல் ஆராய்ச்சியில் 30 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு -
சீன விஞ்ஞானிகள் ஆழ்கடலில் தூண்டில் இரையுடன், கமெரா பொருத்தி ஆய்வு நடத்தினர். அப்போது தூண்டிலில் இருந்த இரையை உண்பதற்காக வந்த உயிரினங்கள் கமெராவில் பதிவாகின.
அவற்றில் 30 உயிரினங்கள் புதிய உயிரினங்கள் என்பது பின்னர் நடந்த ஆய்வில் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, கிழக்கு சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தில் சர்வதேச கடல் ஆணைய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சீனா விஞ்ஞானிகள் ஆழ்கடல் ஆய்வில் புதிதாக கண்டறியப்பட்ட 30 புதிய உயிரினங்கள் தொடர்பான வீடியோவை வெளியிட்டனர்.
அந்த வீடியோவில் பலவகை மீன்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் செந்நிற இறால்கள், பாம்பு வடிவு ஈல் மீன்கள், பெரிய கண்களுடன் விமானம் போன்று காட்சித் தரும் அரிய வகை மீன் உள்ளிட்ட மீன்கள் முக்கியமானவை.
விஞ்ஞானிகள் நடத்திய ஆழ்கடல் ஆராய்ச்சியில் 30 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு -
Reviewed by Author
on
May 30, 2018
Rating:
No comments:
Post a Comment