அண்மைய செய்திகள்

recent
-

ஆண்டவனுக்கும் நிகரானவள்.....அன்னையல்லவா.......அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

 அகிலத்தில் அருந்தவம் புரியும் அத்தனை
அன்னையர்களுக்கும் இந்நாளில்
அன்பு பாமாலை  வாழ்த்துக்கள்
அன்னையர்களுக்கு தனையனாக.....2018


ஆண்டவனுக்கும் நிகரானவள்.....அன்னையல்லவா.......

அம்மா அம்மா
எந்தன் அம்மா
நீ இல்லை என்றால்
நானே சும்மா..........

ஊணும் உயிரும் தந்து
உன்னைக்காணவும்
உலகை நீ காணவும்
உரமானவள்  வரமானவள் அன்னையே

உண்ண மறந்து
உறக்கம் துற்ந்து
உருக்கி தன்னை
உதிரம் புரதமாக்கி.
உயிரானவள் அன்னையே

கனவினிலே சுமந்தாயே
கருவினிலே சுமந்தாயே
நினைவிலும் சுமந்தாயே
நிஜமான என் தாயே....

உயிர்கள் எல்லாம்
உலகில் பயிர்கள் போல
உருப்பெற்று உலாவ
உதயமானவள் அன்னையே

உலகினில் எல்லாம்
உன்னதமில்லையம்மா
உன்னைத்தவிர
உலகினிலே சிறந்தது தாய்மையே

அன்புக்கும் பண்புக்கும் அரணானவள்
ஆண்டவனுக்கும் நிகரானவள்
அன்னையல்லவா...இதுதான்
அகிலத்தில் உன்மையல்லவா...

கவிஞர்-கஜேந்திரன்

வெளிவரவுள்ள "வைரமுத்துக்கள்" கவிதை நூலில் இருந்து.

ஆண்டவனுக்கும் நிகரானவள்.....அன்னையல்லவா.......அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் Reviewed by Author on May 13, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.