அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மேற்கு பிரதேசகுமானாயங்குளம் கிராமத்தில் அதி விசம் கொண்ட தேன் குளவிகளின் தாக்குதல் அதிகரிப்பு-(படம்)


மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆள்காட்டி வெளி கிராம அலுவலர் பிரிவில் உள்ள குமானாயங்குளம் கிராமத்தில் உயர்ந்த மரங்களில் அதி விசம் கொண்ட 'பப்பரக்கொப்பான்' எனப்படும் ஒருவகை தேன் குளவி கூடு உள்ளது.

மிகவும் ஆபத்தானது இந்த தேன் குளவிகள் கடந்த சில தினங்களாக அப்பகுதியைச் சேர்ந்த பலரை தீண்டியுள்ளது.

-இதனால் குறித்த கிராம மக்கள் மத்தியிரல் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதோடு மக்கள் குறித்த பகுதியூடாக நடமாக அஞ்சுகின்றனர்.

-குறித்த விடையம் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு பல தடைவ கிராம மக்கள் முறையிட்டும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

-இதனால் அப்பகுதி மக்கள் தொடர்ந்தும் தேன் குழவிகளின் தீண்டுதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே உயர் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய குறித்த 'பப்பரக்கொப்பான்' என அழைக்கப்படும் குறித்த தேன் குளவிக்கூட்டினை அகற்ற உறிய அதிகாரிகள் உடன் முன் வரவேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 - மன்னார் நிருபர்-

மாந்தை மேற்கு பிரதேசகுமானாயங்குளம் கிராமத்தில் அதி விசம் கொண்ட தேன் குளவிகளின் தாக்குதல் அதிகரிப்பு-(படம்) Reviewed by Author on May 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.