அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மரியன்னையின் சிலையை உடைத்த விசமிகள் -

மன்னார்-சௌத்பார் கடற்கரைக்கு செல்லும் பாதையில் புகையிரத நிலையத்துக்கு முன் பகுதியில் கத்தோலிக்க கன்னியர் மடம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைந்திருந்த மரியன்னை சிலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார்-சௌத்பார் கடற்கரைக்கு செல்லும் பாதையில் புகையிரத நிலையத்துக்கு முன் பகுதியில் அமைந்திருந்த மரியன்னையின் சிலை வீதி ஓரத்தில் பல வருடங்களாக காணப்பட்ட சிறிய கோவில் போன்று அமைக்கப்பட்டு அதனுள் வைக்கப்பட்டிருந்த மரியாளின் சிலையே இனம் தெரியாத நபர்களினால் நேற்று உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த மரியன்னையின் சிலை வைக்கப்பட்டிருந்த சிறிய கண்ணாடி போலையானது மேற்பகுதி உடைக்கப்பட்டதோடு, அதனுள் வைக்கப்பட்டிருந்த மரியன்னை சிலை உள்ளிருந்தவாறே சேதப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வீதியூடாக இன்று காலை பயணித்த மக்கள் குறித்த சிலை உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதை கண்டு உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தியுள்ளதோடு, மன்னார் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

அண்மைக் காலங்களாக மன்னார் மாவட்டத்தில் மதச்சிலைகள் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு வருகின்ற போதும், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற போதும், சிலைகள் உடைப்பு தொடர்பில் இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் மரியன்னையின் சிலையை உடைத்த விசமிகள் - Reviewed by Author on May 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.