அண்மைய செய்திகள்

recent
-

ஒரே நேரத்தில் 140 குழந்தைகள் கொன்று புதைக்கப்பட்ட பயங்கரம்: திடுக்கிடும் பின்னணி -


பெருவில் 550 ஆண்டுகளுக்கு முன்னர் 140 குழந்தைகள் மற்றும் 200 ஓட்டக இன மிருகங்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் எலும்புக்கூடுகள் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் Trujillo நகரில் தான் இவை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் அப்பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊரே அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கை தடுத்து நிறுத்தி கடவுளின் மனதை சாந்தப்படுத்த செய்யப்படும் சடங்காக 140 குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டு கடல் இருக்கும் திசை அருகில் மண்ணில் புதைப்பட்டுள்ளனர்.

இதோடு 200 ஓட்டக இன மிருகங்களும் புதைக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சி குழு தலைவர் கேப்ரியல் பிரிட்டோ கூறியுள்ளார்.
கொல்லப்பட்ட குழந்தைகளின் வயது 5லிருந்து 14 வரை இருக்கும் என தெரியவந்துள்ளது.
இது குறித்த ஆராய்ச்சிகள் சில காலமாகவே நடைபெற்று வந்த நிலையில் தற்போது முதல்முறையாக வெளியுலகுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட எலும்புக்கூடுகள் அனைத்தும் அருங்காட்சியகத்தில் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.



ஒரே நேரத்தில் 140 குழந்தைகள் கொன்று புதைக்கப்பட்ட பயங்கரம்: திடுக்கிடும் பின்னணி - Reviewed by Author on June 09, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.