அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தேசிய இந்துசமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு மாதம்-2018--படங்களுடன்

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் நிகழ்ச்சிதிட்டத்திற்கு அமைவாக

தேசிய இந்துசமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு மாதம் 2018 முன்னிட்டு மன்னார்  மாவட்டத்தில் விழிப்புணர்வு மாதம் மற்றும் கொடி தினம் 10-06 - 2018
இன்று காலை 09 மணியளவில்
  • பெரியகடை ஞான வைரவர் அறநெறிப்பாடசாலையும் 
  • உப்புக்குளம் சித்திவிநாயகர் அறநெறிப்பாடசாலையும்  
  • செல்வநகர் முத்துமாரியம்மன் அறநெறிப்பாடசாலைகளும் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலமானது. பெரியகடை ஞான வைரவர் ஆலயத்தில் இருந்து  உப்புக்குளம் சித்திவிநாயகர் ஆலயம் வரை சென்று மண்டபத்தில் இடபக்கொடியேற்றலும் அதனைத்தொட்ர்ந்து  சிவஸ்ரீ சிவரூபசர்மா அவர்களின்சிறப்பு பூசையும்அதனைத்தொடர்ந்து அறநெறிக்கல்வியின் அவசியம் இந்துசமயத்தின் மகத்துவம் இந்துக்களாகிய நாங்கள் எவ்வாறு வாழவேண்டும்  என்பதினை கலந்து கொண்ட அறநெறிப்பாடசாலைகளின் மாணவமாணவிகளுக்கு மிகவும் அழகாக ஆசிரியர் திரு.றோகன் ராஜ் மற்றும் சமய ஆர்வலர்கள் தெளிவு படுத்தினர்.
  • கொடிகள் குத்தும்  நிகழ்வும் இடம்பெற்றது முதல் கொடியினை ரூபா 10000 கொடுத்துப் வைத்திய கலாநிதி திரு.M.கதிர்காமநாதன் பெற்றுக்கொண்டார் அதனைத்தொடர்ந்து திரு சிவ அவர்களுகளும் ஏனையோரும் பெற்ற்க்கொண்டனர்.
நிகழ்வின் விருந்தினர்களாக...
தலைமை திரு. S.பிருந்தாவன நாதன் அறநெறிப்பாடசாலைகளின் காப்பாளர்
வைத்திய கலாநிதி திரு.M.கதிர்காமநாதன் இந்து ஆலயங்களின் ஒன்றியத்தலைவர் மன்னார்
திரு.S.S.இராமகிருஸ்ணன் தலைவர்-இந்துமகாசபை மன்னார்

இவர்களுடன் இணைந்து சிவபூமி இந்து இளைஞர் மன்றம்,மாதோட்ட இந்துமக்கள் ஒன்றியம் இன்னும் இந்து மன்றங்களின் உறுப்பினர்கள் அறநெறிப்பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
 இவ்நிகழ்வினை மன்னார் மாவட்ட இந்துக்கலாச்சார உத்தியோகத்த்ர் A.ஜீவிதா H.C.O ஒழுங்கமைத்திருந்தார்.

 தொகுப்பு- வை.கஜேந்திரன்














































மன்னாரில் தேசிய இந்துசமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு மாதம்-2018--படங்களுடன் Reviewed by Author on June 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.