அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை அகதி ஒருவர் தீக்குளிக்க முயற்சி -


இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இலங்கை அகதி இன்று தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் விஜய் (எ) அஜய்குமார் (30). இவர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இன்று பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதன்போது அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த பொலிஸார், ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அவரை தடுத்து காப்பாற்றினர். பின்னர், கேணிக்கரை பொலிஸ் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய விஜய்,
நான் 7 வயதில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வந்தேன். அப்போது முதல் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வருகிறேன்.
எனது சொந்த நாடான இலங்கைக்கு செல்ல விரும்புவதாக பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் என்னை அனுப்பிவைக்கவில்லை.
இதனால், கடந்த 2015 -இல் கள்ளப்படகில் இராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு செல்ல முயன்றேன். அப்போது, கியூ பிரிவு பொலிஸார் என்னை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

எனது வழக்கை விசாரித்த இராமேசுவரம் நீதிமன்றம், என்னை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனாலும், இதுவரை அதிகாரிகள் என்னை இலங்கைக்கு அனுப்பி வைக்கவில்லை.
மண்டபம் அகதிகள் முகாமிலும், மின்சாரம், குடிநீர் வசதி போதுமான அளவில் இல்லை. இதனாலேயே தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றேன் என” குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அகதி ஒருவர் தீக்குளிக்க முயற்சி - Reviewed by Author on June 14, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.