மன்னார் சௌத்பார் பகுதியில் மர்ம பொதி மீட்பு....
மன்னார் சௌத்பார் உப்பளத்தின் ஊடாக மன்னார் புகையிரத நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதியில் வீடு ஒன்றிற்கு முற்பகுதியில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்று இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருதாவது இன்று காலை மன்னார் சௌத்பார் உப்பளத்தின் ஊடாக மன்னார் புகையிரத நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதியில் வீடு ஒன்றிற்கு முற்பகுதியில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு கட்டப்பட்ட நிலையில் பொதி காணப்பட்ட போதிலும் குறித்த பிரதேசத்து மக்கள் எந்த கவனமும் செலுத்தவில்லை ஆனால் இன்று மதியம் குறித்த பொதியினுள் இருந்து துரநாற்றம் வீசவதை அவதானித்த மக்கள் அருகில் சென்று பார்த்த போது அவ் பொதியில் இருந்து இரத்தம் சிந்துவதை அவதானித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து குறித்த பொதி தொடர்பாக பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததை தொடர்ந்து வருகை தந்த பொலிஸார் அவ் பொதியினை அவிழ்து பார்த்த போது குறித்த பொதியினுல் அடித்து சிதைத்து கொல்லப்பட்ட நாய் ஒன்றின் சடலம் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறன ஓரு செயலை செய்து விட்டு இவ்வாறு மக்கள் நடமாடும் பகுதில் சடலத்தை வீசி எறிந்தவர்கள் நிச்சயம் மனித தன்மை அற்றவர்கள்....
மன்னார் சௌத்பார் பகுதியில் மர்ம பொதி மீட்பு....
Reviewed by Author
on
June 15, 2018
Rating:
No comments:
Post a Comment