அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இளைஞரின் தாயார் கதறல் -


பிரித்தானியாவின் Ipswich பகுதியில் உள்ள கடைத் தெருவில் மர்ம நபர்களால் குத்திக் கொல்லப்பட்ட இளைஞரின் தாயார் கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் பார்வையாளர்களை உருக வைத்துள்ளது.
மேலும் பல குடும்பங்களை துயரத்தில் ஆழ்த்தும் முன்னர் இந்த வன்முறை கலாச்சாரத்திற்கு முடிவு கட்டுங்கள் என சனிக்கிழமை கொல்லப்பட்ட 17 வயது இளைஞரின் தாயார் கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
Ipswich பகுதியில் கடை ஒன்றில் இருந்து தமது குடியிருப்புக்கு திரும்பி சென்றுகொண்ருந்தார் 17 வயதான Tavis Spencer-Aitkens என்ற இளைஞர்.
அப்போது மிதிவண்டியில் வந்த இருவர் குறித்த இளைஞரை வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த டேவிஸ் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் விசாரித்து வரும் Suffolk பகுதி பொலிசார், இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்த டேவிசின் குடும்பத்தினர், இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த வழக்கில் இதுவரை 5 இளைஞர்களை பொலிசார் கைது செய்து விசாரித்து வருவதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இளைஞரின் தாயார் கதறல் - Reviewed by Author on June 07, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.