அண்மைய செய்திகள்

recent
-

தேசிய ரீதியில் 1ம்-2ம் இடங்களைப் பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு அமோக வரவேற்பு-(படம்)


அகில இலங்கை தமிழ் தின நாடகப்போட்டியில்  தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்ற மன்னார் அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவர்களும், வாசிப்பு போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவிக்கும் மன்னாரில் இன்று திங்கட்கிழமை(23) காலை   அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

மன்னார் வலயக்கல்வி பணிமனையின் ஏற்பாட்டில்,வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் தலைமையில் குறித்த வரவேற்பு நிகழ்வு இடம் பெற்றது.

இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தடிக்கு முன் குறித்த வரவேற்பு நிகழ்வு ஆரம்பமானது.

-இதன் போது அகில இலங்கை தமிழ் தின நாடகப்போட்டியில்  தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்ற மன்னார் அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை மாண மாணவிகளும், வாசிப்பு போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவியும் , ஆசிரியர்கள்,அதிபர்கள் ஆகியோருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

பிரதான பாலத்தடியில் இருந்து வாத்திய இசையுடன் ஊர்வலமாக மன்னார் வலயக்கல்வி அலுவலகம் வரை அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் மன்னார் வலயக்கல்வி பணிமனையில்,வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன் தலைமையில்,பாராட்டு நிகழ்வு இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் பாடசாலைஅதிபர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள்,வலயக்கல்வி பணிமனை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 





தேசிய ரீதியில் 1ம்-2ம் இடங்களைப் பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு அமோக வரவேற்பு-(படம்) Reviewed by Author on July 24, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.