மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப்பகிஸ்கரிப்பில்-மக்கள் பாதீப்பு-(படம்)
சிங்கப்பூர் அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 24 மணி நேர அடையாள பணிப்பகிஸ்கரிப்புக்கு ஆதரவு தெரிவித்து மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்று (3) பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் தூர இடங்களில் இருந்து பல்வேறு மருத்துவ தேவைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு வந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
-குறிப்பாக சிறுவர்கள்,பெண்கள்,கர்ப்பிணி தாய்மர்hகள்,வயோதிபர்கள் என பல தரப்பினரும் நீண்ட நேரம் காத்து நின்று ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
-மேலும் மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் விடுதிச் சேவைகள் மாத்திரமே இன்றைய தினம் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் தூர இடங்களில் இருந்து பல்வேறு மருத்துவ தேவைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு வந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
-குறிப்பாக சிறுவர்கள்,பெண்கள்,கர்ப்பிணி தாய்மர்hகள்,வயோதிபர்கள் என பல தரப்பினரும் நீண்ட நேரம் காத்து நின்று ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
-மேலும் மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் விடுதிச் சேவைகள் மாத்திரமே இன்றைய தினம் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப்பகிஸ்கரிப்பில்-மக்கள் பாதீப்பு-(படம்)
Reviewed by Author
on
August 03, 2018
Rating:
No comments:
Post a Comment