அண்மைய செய்திகள்

recent
-

தேசிய கால்­பந்­தாட்ட அணி­யில் இடம்பிடித்த ஆறு யாழ் வீராங்கனைகள்!


பூட்­டான் தலை­ந­கர் திம்­பு­வில் இடம்­பெ­ற­வுள்ள தெற்­கா­சிய கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்­தின் 15 வய­துக்கு உட்­பட்­டோ­ருக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் பங்­கு­பற்­ற­வி­ருக்­கும் இலங்கை கால்­பந்­தாட்டக் குழா­மில் யாழ்ப்­பாண மாவட்­டத்­தைச் சேர்ந்த ஆறு வீராங்­க­னை­கள் இடம்­பி­டித்­த­னர்.

தொட­ருக்­குச் செல்­ல­வுள்ள 23 பேர் கொண்ட குழா­மில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள வீராங்­க­னை­க­ளின் பெயர் விப­ரங்­களை நேற்­று­முன்­தி­னம் இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னம் அறி­வித்­துள்­ளது.

இதில் பண்­டத்­த­ரிப்பு பெண்­கள் உயர்­த­ரப் பாட­சா­லை­யைச் சேர்ந்த ர.கிரு­சாந்­தினி, ஏ.டி.மேரி கொன்­சிகா மற்­றும் பா.செயந்­தினி ஆகி­யோ­ரும்,
தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரி­யின் எஸ்.தவப்­பி­ரியா, யு.ஜோகிதா மற்­றும் ஜெ.ஜெதுன்­சிகா ஆகி­யோ­ரும் அவ்­வாறு 23 பேர்­கொண்ட அணி­யில் பெய­ரி­டப்­பட்­டுள்­ள­னர்.




தேசிய கால்­பந்­தாட்ட அணி­யில் இடம்பிடித்த ஆறு யாழ் வீராங்கனைகள்! Reviewed by Author on August 11, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.