அரசினதும்,மேற்குலகத்தினதும் நிகழ்ச்சி நிரலுக்கு எம்மவர்களும் ஒத்துழைக்கின்றார்களா? -
மறக்கச் செய்தல் என்கின்ற அரசினதும், மேற்குலகத்தினதும் நிகழ்ச்சி நிரலுக்கு எம்மவர்களும் சேர்ந்து ஒத்துழைக்கின்றார்களா? என்கின்ற சந்தேகம் வருவதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்கள் சங்கத்தின் அலுவலகம் மன்னாரில் நேற்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
மன்னாரை தவிர ஏனைய இடங்களில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சுமார் ஒரு வருடங்களை கடந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மன்னாரில் ஒன்றும் இல்லை.
மறக்கச் செய்தல் என்கின்ற அரசினதும், மேற்குலகத்தினதும் நிகழ்ச்சி நிரலுக்கு எம்மவர்களும் சேர்ந்து ஒத்துழைக்கின்றார்களா? என்கின்ற சந்தேகம் எமக்கு இப்போது வருகின்றது.
சில நிறுவனங்கள் திட்டம் தீட்டுகின்றார்கள். அவர்கள் போராடவில்லை. திட்டம் செய்வதும், திட்டத்தை நடைமுறைப்படுத்துவதும் வரவு, செலவு கணக்கு காட்டுவதுமே அவர்களது கடமையாக இருக்கின்றது.
வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவமே வெளியேறு என்று, யுத்தத்திற்கு பின்னர் முதல் முதலாக போராட்டம் நடத்தியவர்கள் நாங்கள் என கூறியுள்ளார்.
அரசினதும்,மேற்குலகத்தினதும் நிகழ்ச்சி நிரலுக்கு எம்மவர்களும் ஒத்துழைக்கின்றார்களா? -
Reviewed by Author
on
August 12, 2018
Rating:
No comments:
Post a Comment