அண்மைய செய்திகள்

recent
-

26 நோய்களையும் குணப்படுத்தை இந்த சிறிய காய் போதுமாம்! -


சித்தமருத்துவத்தில் மிக முக்கியமான காயகற்ப மூலிகைப் பொருளாக திகழ்வது கடுக்காய்.
இவை உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, நோய்களை போக்குவதால் அமிர்தம் என்ற சிறப்பு பெயரும் இதற்கு உண்டு.
மேலும் கடுக்காய் உயிரைக் கொல்லும் 26 விதமான நோய்களுக்கும் தீர்வளிக்கும் வல்ல‍மை கொண்ட ஓர் அதிசய மூலிகைக் காயாக விளங்குகின்றது.
கடுக்காயின் மருத்துவ குணங்கள்
  • கடுக்காய் உடலில் நன்கு பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும்.
  • கடுக்காய் வாய், தொண்டை, இரைப்பை, குடல் ஆகிய இடங்களில் உள்ள ரணங்களை ஆற்றிடும் வல்லமை பெற்றது.
  • உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.
  • தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.
  • இஞ்சி, சுக்கு, கடுக்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரைநோய், இதயநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் கட்டுப்படும்.
  • பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு, பல் அசைவு, ஈறுகளில் உண்டாகும் புண், வாயில் ஏற்படும் வாடை போன்றவைகளை போக்க கடுக்காய் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொப்பளிக்கவேண்டும்.
  • கண்களை சுற்றியுண்டாகும் கருவளையத்தை போக்க கடுக்காய் சிறந்தது. கடுக்காய் பொடியை பன்னீரில் கலந்து கண்களை சுற்றி பூசவேண்டும்.
கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்
  • கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண்.
  • ஆசனப்புண், அக்கி, தேமல், படை, பிற தோல் நோய்கள், உடல் உஷ்ணம்,ரத்தபேதி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன்.
  • வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், பௌத்திரக் கட்டி.
  • ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் மேற்கூறிய 26 வகையான நோய்களுக்கும் அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.
பயன்படுத்தும் முறை
  • நாட்டு மருந்து கடைகளில் கடுக்காயை வாங்கி அதனுள் இருக்கும் பருப்பை நீக்கிவிட்டு, அதன்பிறகு அதனை நன்றாக தூள் தூளாக அரைத்து வைத்துக் கொண்டு, தினமும் ஒரு ஸ்பூன் அளவு வீதம் இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர வேண்டும்.
  • இப்படி தொடர்ந்து உண்டு வந்தால் மேற்கூறிய 26 நோய்களில் இருந்தும் முற்றிலும் விடுபட்டு நோயில்லா பெரு வாழ்வுடன் இளமையாகவும் வாழலாம்.

26 நோய்களையும் குணப்படுத்தை இந்த சிறிய காய் போதுமாம்! - Reviewed by Author on September 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.