அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை மற்றும் இந்தியா அணிகள் தக்க வைத்துள்ள சாதனை என்ன தெரியுமா?


ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 4 வீரர்களைக் கொண்ட அணியகளாக இலங்கை, இந்தியா அணிகள் மட்டுமே உள்ளன.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இலங்கையின் ஜெயசூர்யா, சங்ககாரா, ஜெயவர்தனே மற்றும் தில்ஷன் ஆகிய நான்கு வீரர்கள் பத்தாயிரம் ஓட்டங்களை கடந்துள்ளனர்.
அதே போல் இந்திய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் டோனி ஆகிய நான்கு வீரர்கள் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்துள்ளனர்.
இதன்மூலம் 10,000 ஓட்டங்களை கடந்த, ஒன்றுக்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்ட அணிகளாக இந்த இரு அணிகள் மட்டுமே உள்ளன. ஏனைய அணிகளில் ஒரு வீரர் மட்டுமே 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்தவர்களாக உள்ளனர்.
10 ஆயிரம் ஓட்டங்கள் கடந்த வீரர்கள்
  • சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)
  • குமார் சங்ககாரா (இலங்கை)
  • ரிக்கி பாண்டிங் (அவுஸ்திரேலியா)
  • சனாத் ஜெயசூர்யா (இலங்கை)
  • மகிளா ஜெயவர்தனே (இலங்கை)
  • இன்ஸமாம் உல்-ஹக் (பாகிஸ்தான்)
  • ஜேக் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா)
  • சவுரவ் கங்குலி (இந்தியா)
  • ராகுல் டிராவிட் (இந்தியா)
  • பிரையன் லாரா (மேற்கிந்திய தீவுகள்)
  • திலகரத்னே தில்ஷன் (இலங்கை)
  • மகேந்திர டோனி (இந்தியா)


இலங்கை மற்றும் இந்தியா அணிகள் தக்க வைத்துள்ள சாதனை என்ன தெரியுமா? Reviewed by Author on September 23, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.