அண்மைய செய்திகள்

recent
-

கூட்டமைப்பை தொடர்ந்தும் ஆதரித்தால் சறுக்க நேரிடும்? சி.வி விக்னேஸ்வரன் -


தமிழ் தேசியக் கூட்டமைப்பை தொடர்ந்தும் ஆதரித்தால் தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகளில் இருந்தும் சறுக்க நேரிடும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழ் மக்களின் உண்மையான அரசியல் நிலைமையை, புரிந்துக் கொள்ளும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லை.
அதனால், தொடர்ந்தும் ஆதரித்தால் தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகளில் இருந்தும் சறுக்க நேரிடும். தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்புக்களிலும், தேவைகளிலும் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு விலகியே உள்ளது.

இதேவேளை, கூட்டமைப்பு குறிப்பிட்ட கொள்கைகளை கொண்ட அமைப்பல்ல என்றும் அது பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியும் அல்லவென்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதில் மக்களின் பங்குபற்றுதல்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டமைப்பை தொடர்ந்தும் ஆதரித்தால் சறுக்க நேரிடும்? சி.வி விக்னேஸ்வரன் - Reviewed by Author on September 10, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.