அக்னி 5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா -
இந்த ஏவுகணைகளை இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தினர் அடிக்கடி விண்ணில் செலுத்தி பரிசோதித்து பார்ப்பது உண்டு.
அந்த வரிசையில் இன்று காலை அக்னி-5 ரக ஏவுகணை சோதனை நடந்தது. திட்டமிட்டப்படி குறிப்பிட்ட இலக்கை அந்த ஏவுகணை தாக்கியது. இதனால் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அறிவிக்கப்பட்டது.
கடைசியாக அக்னி-5 ரக ஏவுகணை சோதனை 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்டு இருந்தது. 13 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அந்த ரக ஏவுகணை பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆற்றல் கொண்ட அக்னி-5 ஏவுகணையால் 5 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்க முடியும்.
ஒடிசா கடற்கரையில் இருந்த ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்ட அக்னி-5 ரக ஏவுகணை அணு ஆயுதங்களை தேவைக்கு ஏற்ப சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த ஏவுகணையில் 3 கட்ட எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கும்.
அக்னி-2 ஏவுகணை 2000 கிமீ தொலைவு சென்று இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இதேபோல் அக்னி-3 ஏவுகணை 2500 கிமீ தொலைவும் அக்னி-4 ஏவுகணை 3500 கிமீ தொலைவும், அக்னி-5 ஏவுகணை 5000 கிமீ தொலைவும் செல்லக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்த ஏவுகணையால் சீனாவின் வடக்கு பக்க எல்லை வரை செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்னி 5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா -
Reviewed by Author
on
December 11, 2018
Rating:
No comments:
Post a Comment