சிறுநீரக கற்கள் உண்டாகாமல் தடுக்க இந்த
சிறுநீர் கழிப்பதில், சிரமம், சிறுநீர் நிற மாற்றம், குமட்டல், காரணமின்றி தொடர்ந்து வயிறு வலி போன்றவை சிறுநீர் கற்கள் உண்டானதற்கான அறிகுறிகளாகும்.
இதற்கு அடிக்கடி மருந்துவரை சந்திப்பதை தவிர்த்து விட்டு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே இதனை எளிதில் சரி செய்ய முடியும்.
வெள்ளரியுடன் இஞ்சி, ஆப்பிள், புதினா சேர்த்து தயாரிக்கும் இந்த அற்புத ஜூஸை பருகி வந்தால் சிறுநீரக கற்களை மட்டுமின்றி, உடலில் தேவையின்றி சேரும் கொழுப்பையும் கரைக்க முடியும்.
இந்த வெள்ளரி ஜூஸில் வைட்டமின் எ, பி, பி 1, பி 2, பி 6, சி, டி, ஈ, கே போன்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன.
தற்போது கிட்னி கற்களை கரைக்க இந்த அற்புத வெள்ளரி ஜூஸை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- ஒரு வெள்ளரி
- ஓர் சிறிய துண்டு இஞ்சி
- கொஞ்சம் புதினா இலைகள்
- ஒரு ஆப்பிள்
செய்முறை
முதலில் அப்பிளின் நடுப்பகுதியை சீவி நீக்கிவிடுங்கள்.பின் வெள்ளரியின் கசப்பான வேண்டாத பகுதியை நீக்கிடுங்கள்.
பிறகு அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஜூஸ் மிக்ஸரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த அற்புத ஜூஸை குடிப்பதனால் சிறுநீரக கற்கள் உண்டாகாமல் காக்கும்.
மேலும் ஃப்ளூ காய்ச்சல் வரமால் தடுக்கும், ஸ்ட்ரோக் ஏற்படும் வாய்ப்பினை குறைக்கும் குமட்டல் ஏற்படாது, சளி உண்டாகாமல் தடுக்கும்.
ஏனைய நன்மைகள்
- வயிற்றுப் போக்கை தடுக்கும்.
- கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் காக்கும்.
- உடலில் பாக்டீரியாக்கள் அதிகரிக்காமல் தடுக்கலாம்.
- இதயத்தில் கட்டி உண்டாகாமல் பாதுகாக்கும்.
- செரிமானம் சிறக்கும்.
- உடலில் உள்ள நச்சுக்களை போக்கும்.
- இரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய பலனளிக்கும்.
- மலமிளக்க பிரச்சனையை சரி செய்யும்.
- நரம்பு மண்டலத்தின் வலுவை அதிகரிக்கும்.
- உடலில் இருக்கும் புழுக்களை அழிக்கும்.
சிறுநீரக கற்கள் உண்டாகாமல் தடுக்க இந்த
Reviewed by Author
on
January 26, 2019
Rating:
No comments:
Post a Comment