அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-இலவன்குளம்,மறிச்சிக்கட்டி பாதை திறக்கப்படும்...


மன்னார் - இலவன்குளம், மறிச்சிக்கட்டி பாதையை மீண்டும் பொதுமக்களின் பாவனைக்கு திறந்து விடுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பிட்ட பாதையை பொதுமக்கள் பாவனைக்கு பயன்படுத்துவதை எதிர்த்து 2010ஆம் ஆண்டு "சூழலியல் வன பாதுகாப்பு லிமிட்டட்" என்ற அமைப்பினால் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கின் விவாதம் இன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது மனுதாரர்கள், இந்தப் பாதையை திறப்பது தொடர்பாக இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.
இந்த வழக்கின் பிரதிவாதிகளாக வன ஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம், சட்டமா அதிபர், வீதி போக்குவரத்து அதிகார சபை, மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
எதிர்வரும் மார்ச் மாதம் 25ஆம் திகதி இது தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சட்டமா அதிபர் சார்பில் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி, பொதுமக்களும் இந்த பாதையை பாவிக்கின்ற விதத்தில் எந்தளவுக்கு மட்டுப்பாடுகளை ஏற்படுத்தலாம் என்பதையும் உச்ச நீதிமன்றத்தில் அறிவிப்பு செய்யவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தெரிவித்துள்ளார்.
மன்னார்-இலவன்குளம்,மறிச்சிக்கட்டி பாதை திறக்கப்படும்... Reviewed by Author on January 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.