மன்னார் மாவட்டத்திற்கான பொலிஸ் குற்ற பரிசோதனை ஆய்வு கூடம் உயிலங்குளத்தில் திறந்து வைப்பு-படம்
மன்னார் மாவட்டத்திற்கான பொலிஸ் குற்ற பரிசோதனை ஆய்வு கூடம் இன்று வியாழக்கிழமை 31-01-2019 மாலை மன்னார் உயிலங்குளம் பொலிஸ் காவல் அரணில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த பொலிஸ் குற்ற பரிசோதனை ஆய்வு கூடத்தினை வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் றொசான் பெணான்டோ வைபவ ரீதியாக திறந்து வைத்தார். 43 ஆவது பொலிஸ் குற்ற பரிசோதனை ஆய்வு கூடம் இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மன்னார்,வவுனியா மாவட்ட பொலிஸ் அதிகாரிகள்,திணைக்கள அதிகாரிகள் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் இடம் பெறுகின்ற குற்றச் செயல்களின் ஆய்வுகள் தொடர்ச்சியாக வவுனியாவில் உள்ள பொலிஸ் குற்ற பரிசோதனை ஆய்வு கூடத்தில் இடம் பெற்று வந்தது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள 9 பொலிஸ் நிலைய பிரிவுகளிலும் இடம் பெறும் குற்றச் செயல்களின் பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்ள மன்னார் உயிலங்குளத்தில் குறித்த பொலிஸ் குற்ற பரிசோதனை ஆய்வு கூடம் சுவீடன் நாட்டின் நிதி உதவியுடன் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அவர்களின் முயற்சியினால் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பொலிஸ் குற்ற பரிசோதனை ஆய்வு கூடத்தினை வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் றொசான் பெணான்டோ வைபவ ரீதியாக திறந்து வைத்தார். 43 ஆவது பொலிஸ் குற்ற பரிசோதனை ஆய்வு கூடம் இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மன்னார்,வவுனியா மாவட்ட பொலிஸ் அதிகாரிகள்,திணைக்கள அதிகாரிகள் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் இடம் பெறுகின்ற குற்றச் செயல்களின் ஆய்வுகள் தொடர்ச்சியாக வவுனியாவில் உள்ள பொலிஸ் குற்ற பரிசோதனை ஆய்வு கூடத்தில் இடம் பெற்று வந்தது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள 9 பொலிஸ் நிலைய பிரிவுகளிலும் இடம் பெறும் குற்றச் செயல்களின் பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்ள மன்னார் உயிலங்குளத்தில் குறித்த பொலிஸ் குற்ற பரிசோதனை ஆய்வு கூடம் சுவீடன் நாட்டின் நிதி உதவியுடன் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அவர்களின் முயற்சியினால் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்திற்கான பொலிஸ் குற்ற பரிசோதனை ஆய்வு கூடம் உயிலங்குளத்தில் திறந்து வைப்பு-படம்
Reviewed by Author
on
February 01, 2019
Rating:
No comments:
Post a Comment