அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக தமிழ் நேசன் அடிகளார் தெரிவு-

மன்னார் மாவட்டத்தில் இயங்கும் கலை இலக்கிய அமைப்பான மன்னார் தமிழ்ச்சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் இடம் பெற்ற பொதுக் கூட்டத்தின் போதே இந்தப் புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
அதன்படி புதிய தலைவராக அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாரும், முது நிலைத் துணைத் தலைவராக   செ. அ. ராதா பெனாண்டோ அவர்களும், துணைத்தலைவராக   சந்திரலிங்கம் றமேஸ் அவர்களும், பொதுச்செயலாளராக   அ. ச. மாக்ஸ் மில்லன் குரூஸ் அவர்களும், நிர்வாகச் செயலாளராக   அ. பிலிப்புப்பிள்ளை அவர்களும், நிதிச் செயலாளராக ஜனாப் கலீல் முகமது நஜீம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

 நிர்வாக உறுப்பினர்களாக மஹா தர்ம குமார குருக்கள்,   எஸ். ஏ. உதயன், திருமதி பெப்பி விக்ரர் லெம்பேட், மன்னார் அமுதன்,   எஸ். எச். முகமட் சிஹார், திருமதி ஜெயா பாலாஜி, திருமதி குயினி கிருபானந்தன்,   ஏ. ஜோன் பொஸ்கோ,   சு. நிக்சன் குரூஸ் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

  இற்றைக்கு பத்து வருடங்களுக்கு (2009) முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கம் கடந்த காலங்களில் பல காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுத்துவந்துள்ளது.

 மன்னார் தமிழ்ச் செம்மொழி விழா (2010), தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா 2013, திருவள்ளுவர் விழா (2016) போன்றவை குறிப்பிடத்தக்கனவாகும்.


மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக தமிழ் நேசன் அடிகளார் தெரிவு- Reviewed by Author on February 08, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.