அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் வள்ளுவம் கண்ட தமிழ்த்தேசியம் - சிறப்புச் சொற்பொழிவு

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் 'வள்ளுவம் கண்ட தமிழ்த் தேசியம்'
என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வு இடம்பெற்றது. தமிழ்நாட்டில்
இருந்து வருகைதந்த அருட்திரு. வெனி இளங்குமரன் அடிகளார் இந்தச்
சிறப்புச்சொற்பொழிவை நிகழ்த்தினார். கடந்த 10.02.2019 ஞாயிறு பிற்பகல்
3.00 மணிக்கு மன்னார் தாழ்வுபாடு வீதியில் உள்ள குடும்பப்பணி நிலைய
மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

விருந்தினர் மதிப்பளிப்பு மங்கல விளக்கேற்றல் நிகழ்வுகளைத் தொடர்ந்து
மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி மாணவியரினால் தமிழ்த்தாய்
வாழ்த்துப் பாடப்பட்டது. தொடர்ந்து இறைவணக்கப் பாடல் இடம்பெற்றது.
பின்னர் மன்னார் கலார்ப்பனா நாட்டியப்பள்ளி மாணவியரினால் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. தொடர்ந்து
எழுத்தாளர் எஸ். ஏ. உதயன் அவர்கள் இந்நிகழ்வுக்குகத் தலைமைதாங்கினார்.
மன்னார் தமிழ்ச்சங்கத் தலைவர் அருட்திரு, தமிழ் நேசன் அடிகளார் அறிமுக
உரையாற்றினார். சொற்பொழிவின் நிறைவில் மன்னார் அரசாங்க அதிபர் திரு.C.A மோகன் றாஸ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நிறைவாக மன்னார் தமிழ்ச்சங்க நிதிச்செயலாளர் ஜனாப் கலீல் முஹம்மது நஜீம் அவர்களினால் நன்றியுரை  வழங்கினார்.
 






மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் வள்ளுவம் கண்ட தமிழ்த்தேசியம் - சிறப்புச் சொற்பொழிவு Reviewed by Author on February 12, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.