அண்மைய செய்திகள்

recent
-

உயரிய விருதை 3வது முறையாக பெற்று சாதனை படைத்த நியூசிலாந்து வீரர்!


நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், 3வது முறையாக ‘சர் ரிச்சர்ட் ஹாட்லீ’ விருதை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
இந்த தலைமுறையின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழும் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், கடைசியாக விளையாடிய நான்கு அணிகளுக்கு எதிரான தொடர்களில் சிறப்பாக விளையாடினார்.
இந்த சீசனில் டெஸ்ட் போட்டிகளில் 925 ஓட்டங்களும், ஒருநாள் போட்டிகளில் 838 ஓட்டங்களும், டி20 கிரிக்கெட்டில் 332 ஓட்டங்களும் குவித்து அசத்தினார்.



மேலும், இவரது தலைமையில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.
இதன்மூலம் ஆண்டுதோறும் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘சர் ரிச்சர்ட் ஹாட்லீ’ என்ற விருதை கேன் வில்லியம்சன் வென்றுள்ளார்.
இதனை அவர் மூன்றாவது முறையாக பெற்றுள்ளார். எனவே, 3 முறை சர் ரிச்சர்ட் ஹாட்லீ விருதை பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை கேன் வில்லியம்சன் பெற்றுள்ளார். இதற்கு முன்பு ராஸ் டெய்லர் இரண்டு முறை இந்த விருதை பெற்றுள்ளார்.
உயரிய விருதை 3வது முறையாக பெற்று சாதனை படைத்த நியூசிலாந்து வீரர்! Reviewed by Author on March 23, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.