திருக்கேதீஸ்வரத்தின் அலங்கார வளைவு நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைவாக கேதீஸ்வர நிர்வாகத்தினரால் அகற்றப்பட்டது-படங்கள்
கடந்த சிவராத்திரி தினத்திற்கு முதல் நாள் திருக்கேதீஸ்வரத்தின் ஆலய வீதியில் அலங்கார வளைவு நிர்வாகம் மற்றும் தொண்டர்களால் அமைக்கப்பட்டுக்கொண்டிருந்த போது பங்குத் தந்தையர் சகிதம் கத்தோலிக்க மக்களால் பலவந்தமாக பிடுங்கி எறியப்பட்டது பின்னர் நிர்வாகத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர். அதற்கு அமைவாக வழக்கினை விசாரித்த நீதிபதி மன்னார் பதில் நீதவான் கயஸ் பல்டானோ திருவிழா நடைபெறுவதனால் திருக்கேதீஸ்வரம் ஆலய வீதியில் மீண்டும் அலங்கார வளைவு அமைப்பதற்கு நான்கு நாட்களுக்கு மன்னார் பதில் நீதவான் அனுமதி அளித்திருந்தார். அந்த வகையில் 07-03-2019 மாலை 05 மணியளவில் திருக்கேதீஸ்வரம் ஆலய நிர்வாகத்தினரும் தொண்டர்களும் இணைந்து அலங்கார வளைவினை அகற்றினார்கள்.
இதன்போது கருத்து தெரிவித்த சிவத்தொண்டர்கள்
அன்பே சிவம் என்னும் நாமத்திற்கு இசைவாக நீதிமன்ற தீர்ப்பை மதித்து திருக்கேதீஸ்வரம் வீதியில் அமைத்திருந்த அலங்கார வளைவை தற்காலிகமாக அகற்றுவதாக கடந்த நான்காம் திகதியில் இருந்து இன்றுவரை அவ்விடத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்படடிருந்தது இது சம்பந்தமான வழக்கானது நாளைய தினம் மன்னார் நீதி மன்றத்தில் நடைபெற உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
திருக்கேதீஸ்வரத்தின் அலங்கார வளைவு நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைவாக கேதீஸ்வர நிர்வாகத்தினரால் அகற்றப்பட்டது-படங்கள்
Reviewed by Author
on
March 08, 2019
Rating:
No comments:
Post a Comment