அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர் பட்டியலை முழுமையாக செலுத்தாதவர்களுக்கு கால அவகாசம்-படம்

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மன்னார் பிரதேச நீர்ப் பாவனையாளர்கள் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 2 ஆம் திகதிக்கு முன் (02-04-2019) தமது நீர்ப்பட்டியலை முழுமையாக செலுத்தாது விட்டால் தமது இணைப்புக்கள் துண்டிக்கப்படும் என மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

எதிர் வரும் ஏப்பிரல் மாதம் 2 ஆம் திகதி மன்னார் தேசிய நீர் வழங்கல்  வடிகாலமைப்பு  சபையினால் தங்களின் இடத்திற்கு நீர்த் துண்டிப்பு நடை பெறவிருப்பதனால் இது வரை ஒரு மாதத்திற்கு மேல் தங்களின் நீர்ப்பட்டியலில் நிலுவைத் தொகை இருந்தால் எதிர் வரும் ஏப்பிரல் மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் முழுத் தொகையினையும் செலுத்தி துண்டிப்பினை தவிர்த்து மற்றும் மீள் இணைப்பு தண்டப்பணம் என்பவற்றை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

எதிர் வரும் ஏப்பிரல் மாதம் 2 ஆம் திகதிக்கு  முன் செலுத்த தவறும் பட்சத்தில் அன்றைய தினம் நீரிணைப்பு துண்டிக்கப்படும் என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம் என மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

மன்னாரில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர் பட்டியலை முழுமையாக செலுத்தாதவர்களுக்கு கால அவகாசம்-படம் Reviewed by Author on March 27, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.