தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்: நடிகர் கமல்ஹாசன் வேதனை! -
நாடாளுமன்ற தேர்தலானது கடந்த 18ம் திகதியன்று தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக நடைபெற்றது. அன்றைய தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடும் பானை சின்னத்தை மர்ம நபர்கள் சிலர் உடைத்ததாக புகார் எழுந்தது.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. உருட்டு கட்டைகளுடன் பொன்பரப்பியில் உள்ள சில வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.
மருதநாயகம் படத்திற்காக, என் மூத்த அண்ணன் திரு.இளையராஜாவும் நானும் சேர்ந்து எழுதிய பாடல். 300 வருடங்களுக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோகும் பாடல். இன்று மனம் பதைக்கும் ”பொன்பரப்பி” சம்பவங்களுக்கும், அப்பாடல் பொருந்திப் போவது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்.
இந்த விவகாரமானது சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால் 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறித்து பேசியிருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் இந்த விவகாரம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். இதனால் இணையதளவாசிகள் பாஜக மற்றும் அரசியல் கட்சியின் தலைவர் கமலை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் நடிகர் கமல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், பொன்பரப்பி விவகாரம் தொடர்பாக கருத்து பதிவிட்டுள்ளார்.
தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்: நடிகர் கமல்ஹாசன் வேதனை! -
Reviewed by Author
on
April 21, 2019
Rating:
No comments:
Post a Comment