மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதற்கு இதுவே காரணம்! -
வீட்டில் சரியான பாதுகாப்பு கண்காணிப்பு இன்மையே மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதற்கு காரணம் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்தினம் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்காக ஒன்றிணைவோம் எனும் ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சமூக அபிவிருத்தி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடை விலகிய பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வீட்டிலே சரியான பாதுகாப்பு, கண்காணிப்பு என்பன கிடைக்குமாக இருந்தால் நிச்சயமாக அந்த குழந்தை இவ்வாறான நடவடிக்கைகளுக்கு துணைபோகாது.
போதை பொருள் பாவனைக்கு அடிமையாகின்றவர்களில் கூடுதலான வீதத்தினர் மாணவர்களாகவே காணப்படுகின்றனர்.
பாடசாலையில் இருந்து இடை விலகிய மாணவர்களை மீள இணைக்கின்ற பொழுது பல பிரச்சினையாக எழுகின்றது. அதாவது இவர்கள் குறித்த வகுப்பில் மெல்லக்கற்கும் மாணவர்களாகவே காணப்படுகின்றனர்.
ஒரு குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்கின்ற இந்த பாதகமான செயற்பாட்டுக்கு பெற்றோர் என்ற வகையில் நீங்கள் துணைபோகக்கூடாது. எந்த குழந்தையும் கல்வி அறிவில் மேம்பட்ட குழந்தையாக பிறப்பதில்லை பொற்றோரின் பங்களிப்பு மூலமே அது சிறந்து விளங்குகின்றது.
இன்று மிகவும் கவலைக்குரிய விடயமாக காணப்படுவது என்னவெனில் போதை பொருள் பாவனைக்கு அடிமையாகின்றவர்களில் கூடுதலான வீதத்தினர் மாணவர்களாகவே காணப்படுகின்றனர்.
கல்வி மாத்திரம் தங்களுக்கு கிடைக்கவேண்டும் என்று பாடசாலைக்கு செல்லுங்கள் என நான் கேட்க்கவில்லை. நல்ல ஒழுங்கமுள்ள மாணவர்களாக, சிறந்த மாணவர்களாக உங்களால் எதிர்காலத்தில் ஒரு தொழிலினை பெற்றுக்கொள்ள கூடிய மாணவர்களாக நீங்கள் மாறுவதே இந்த சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய உதவியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதற்கு இதுவே காரணம்! -
Reviewed by Author
on
April 12, 2019
Rating:
No comments:
Post a Comment