அண்மைய செய்திகள்

recent
-

திருக்கேதீச்சர வளைவு விவகாரம் - வளைவை அமைத்த மக்கள் வீதியை சேதப்படுத்தியதாக...பிணை வழங்கப்பட்டது

 கேதீச்சர வளைவு உடைப்பு வழக்கின் சந்தேக நபர் ஒருவரால்
இச்சம்பவம் நடைபெற்று 45நாட்கள் கழிந்த நிலையில் குறித்த வளைவு அமைந்துள்ள வீதியின் ஒதுக்குகளை சேதப்படுத்தினர் என மன்னார் பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டது

  மேற்படி முறைபாப்டில் முறைப்பாட்டுகாரர் வளைவு உடைப்பு வழக்கின் சந்தேக நபர், வீதி ஒதுக்கை சேதப்படுத்தியது தொடர்பாக வீதி அபிவிருத்தி திணைகளம் முறைப்பாடு செய்யாமை மற்றும் குறித்த முறைப்பாட்டு காரருக்கு முறைப்பாடு செய்ய அதிகாரம் உள்ளதா,
மற்றும் முறைபாட்டில் ஈடுபட்டவர்கள் சம்பவ இடத்தில் பிரசன்னமாகி இருந்தார்களா போன்ற விடயங்களை ஆராயது வழக்கு இன்று ((22-04-2019) நீதிமன்றத்தில் முற்படுத்திபடுத்தினர்

      இதன்பொழுது நீதவான் பொலிசாரை எச்சரித்ததோடு. வழக்கில் எதிரிகளாக குறிப்பிட பட்ட இந்து சமய செயற்பாட்பாளர்களான இராமகிருஷ்ணன் மற்றும் பிருந்தாவனம் ஆகியோர் சொந்த பிணையிலும் எனையோர் 50000 சரிர பிணையிலும் செல்ல நீதவான் அனுமதித்ததோடு இவ்வழக்கை திருக்கேதிஸ்வர  வளைவு வழக்கு  நடைபெற உள்ள தினத்திற்கு வழக்கை தவணையிட்டார்

      மேலும் மதத் திவிரவாதிகளால் பல்வேறு தாக்குதல் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் நிலையில் மன்னார் பொறுப்பதிகாரியின் செயற்பாடு மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தி உள்ளது.


திருக்கேதீச்சர வளைவு விவகாரம் - வளைவை அமைத்த மக்கள் வீதியை சேதப்படுத்தியதாக...பிணை வழங்கப்பட்டது Reviewed by Admin on April 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.