முடி கிடுகிடுவென வளர வேண்டுமா.....
அந்தவகையில் இதற்காக நாம் கடைகளில் விற்கப்படும் இரசாயம் கலந்த எண்ணெய்களை தான் வாங்கி பூச வேண்டும் என்ற அவசியமில்லை.
இதற்கு இயற்கையாக கரட்டில் இருந்து தயாரிக்கப்படும் கரட் எண்ணெய் சிறந்த முறையில் உதவுகிறது.
இந்த கரட் எண்ணெய், வறண்ட சேதமடைந்த கூந்தலுக்கு ஒரு இயற்கையான புத்துணர்ச்சியைத் தருகிறது.
மேலும் இது ஈ, வைடமின் ஏ, பீட்டா கரோடின் மற்றும் இதர ஊட்டச்சத்துகள் இருப்பதால் சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள், புண் போன்றவை மறைய செய்கின்றது.
தற்போது இந்த கரட் எண்ணெயை வீட்டிலே எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கேரட் - 2 அல்லது 3.
- ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்
- கேரட் துருவி
செய்முறை
முதலில் கரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். துருவிய கேரட்டை பாட்டில் போடவும். விருப்பமான ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை சேர்க்கவும்.கரட் துருவல் முழுவதும் மூழ்கும் அளவிற்கு எண்ணெய்யை ஊற்றவும்.
நன்றாக ஊறியவுடன் கேரட் மிகவும் மென்மையாக மாறி, அந்த எண்ணெய் முழுவதும் ஆரஞ்சு நிறமாக மாறி விடும்.
அப்போது அடுப்பை நிறுத்திவிட்டு ஆற விடவும். அடுத்த 24 மணி நேரம் இந்த கரட் எண்ணெயிலேயே ஊறட்டும்.
ஆறியவுடன், ஒரு வடிகட்டி பயன்படுத்தி எண்ணெய்யை வடிகட்டிக் கொள்ளவும். பிறகு அதனை ஒரு கண்ணாடி போத்தலில் ஊற்றி வைக்கவும்.
அந்த போத்தலில் ஒரு இறுக்கமான மூடி போட்டு மூடி வைக்கவும். குளிர்ந்த இடத்தில் அல்லது தேவைபட்டால் பிரிட்ஜில் கூட இந்த பாட்டிலை வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது இதனை எடுத்து பயன்படுத்தவும்.
தலைக்கு ஷாம்பூ தேய்த்து குளிப்பதற்கு முன்னால் இந்த எண்ணெய்யை தலையில் தடவிக் கொள்ளலாம்.
இப்படி செய்வதால் உங்கள் கூந்தல் எண்ணெய்யை உறிஞ்சி, தலை முடிக்கு ஈரப்பதம் அளித்து, அழகாக்குகிறது.
இந்த கரட் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோடின் போன்றவை சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது.
இதில் இருக்கும் வைட்டமின் ஈ சத்து, உங்கள் கூந்தல் மற்றும் உச்சந்தலையை சேதங்களில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் இது முடி உதிர்வைத் தடுத்து, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
முடி கிடுகிடுவென வளர வேண்டுமா.....
Reviewed by Author
on
June 14, 2019
Rating:
No comments:
Post a Comment