மன்னாரில் சர்வமத தலைவர்களின் பங்கு பற்றுதலுடன் மத ஸ்தலங்களுக்கான நல்லிணக்க தரிசிப்பு நிகழ்வு-(படம்)
மன்னார் மாவட்டத்தில் உள்ள முஸ்ஸீம் பள்ளி வாசல்கள் , பௌத்த விகாரை மற்றும் இந்து கோவில்களுக்கான நல்லிணக்க தரிசிப்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை இடம் பெற்றது.
நாட்டின் பல பாகங்களிலும் அண்மையில் இடம் பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களின் பின்னர் பல்வேறுபட்ட மத ரீதியான முறுகள் நிலைகள் எல்லா மாவட்டங்களிலும் தோற்றம் பெற்ற நிலையில் , மத ரீதியில் நல்லிணக்கத்தை தோற்றுவிக்கும் வகையிலும் முஸ்ஸீம் மக்களின் மத்தியில் நல் அபிப்பிரயத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் தேசிய சமாதான பேரவையின் அணுசரனையில் மன்னார் துயர்துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு குறித்த நல்லிணக்க விஜயம் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட சர்வ மத ஒன்றியத்தின் தலைவர்கள் , பிரதிநிதிகள் , அருட்தந்தையர்கள், மௌலவிகள் , விகாராதிபதிகள் உட்பட மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மன்னார் சின்னக் கரிசல், புதுக்குடியிருப்பு , எருக்கலம் பிட்டி , தாராபுரம் , மன்னார் பெரிய பள்ளிவாசல் , உட்பட மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரதான 6 பள்ளி வாசல்கள் மற்றும் இந்து கோவில்களையும் தரிசித்ததுடன் சாந்திபுரம் பகுதியில் உள்ள பௌத்த விகாரைக்கும் விஜயம் மேற்கொள்ளப்பட்டதுடன் நல்லிணக்க கலந்துரையாடலும் ஒவ்வொறு பள்ளி மற்றும் இந்து ஆலயங்களில் இடம் பெற்றது.
அதே நேரத்தில் மத ரீதியான கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 'மதரசா' மற்றும் 'இந்து அறநெறி' பாடசாலைகளுக்காண கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
நாட்டின் பல பாகங்களிலும் அண்மையில் இடம் பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களின் பின்னர் பல்வேறுபட்ட மத ரீதியான முறுகள் நிலைகள் எல்லா மாவட்டங்களிலும் தோற்றம் பெற்ற நிலையில் , மத ரீதியில் நல்லிணக்கத்தை தோற்றுவிக்கும் வகையிலும் முஸ்ஸீம் மக்களின் மத்தியில் நல் அபிப்பிரயத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் தேசிய சமாதான பேரவையின் அணுசரனையில் மன்னார் துயர்துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு குறித்த நல்லிணக்க விஜயம் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட சர்வ மத ஒன்றியத்தின் தலைவர்கள் , பிரதிநிதிகள் , அருட்தந்தையர்கள், மௌலவிகள் , விகாராதிபதிகள் உட்பட மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மன்னார் சின்னக் கரிசல், புதுக்குடியிருப்பு , எருக்கலம் பிட்டி , தாராபுரம் , மன்னார் பெரிய பள்ளிவாசல் , உட்பட மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரதான 6 பள்ளி வாசல்கள் மற்றும் இந்து கோவில்களையும் தரிசித்ததுடன் சாந்திபுரம் பகுதியில் உள்ள பௌத்த விகாரைக்கும் விஜயம் மேற்கொள்ளப்பட்டதுடன் நல்லிணக்க கலந்துரையாடலும் ஒவ்வொறு பள்ளி மற்றும் இந்து ஆலயங்களில் இடம் பெற்றது.
அதே நேரத்தில் மத ரீதியான கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 'மதரசா' மற்றும் 'இந்து அறநெறி' பாடசாலைகளுக்காண கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
மன்னாரில் சர்வமத தலைவர்களின் பங்கு பற்றுதலுடன் மத ஸ்தலங்களுக்கான நல்லிணக்க தரிசிப்பு நிகழ்வு-(படம்)
Reviewed by Author
on
June 21, 2019
Rating:
No comments:
Post a Comment