அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் எருக்கலம்பிட்டி அரபுகல்லூரியிலிருந்து முதன்முதலாக 8 உலமாக்கள் ஷரீஆ கற்கை நெறி பூர்த்தி-படங்கள்

மன்னார் எருக்கலம்பிட்டி சயீரியா அரபுக்கல்லூரியிலிருந்து முதன்முதலாக
எட்டு உலமாக்கள் தங்கள் ஷரீஆ கற்கை நெறியை முடித்துக்கொண்டு வெளியேறும் நிகழ்வு கடந்த வியாழக் கிழமை (18.07.2019) இடம்பெற்றது.

இவ் சயீரீயா அரபுக்கல்லூரி மன்னார் எருக்கலம்பிட்டியில் 2011.12.11 ம்
திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் கடந்த ஏழு வருடங்களாக இவ் அரபுக்கல்லூரியில் தங்கள் மௌலவிக்கான கற்கை நெறியை முடித்துக் கொண்டு வெளியேறும் முதல் குழவினரும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ் அரபுகல்லூரியின் தலைவர் மௌலவி கே.கிதாயதுல்லா தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் இவ் அரபுகல்லூரியின் நிர்வாகிகள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், எருக்கலம்பிட்டி பகுதியின் முக்கியஸ்தர்கள், உலமாக்கள் , பாடசாலை அதிபர்கள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டதுடன்

இவ் அரபுகல்லூரியை கடந்த ஏழு வருடங்களாக பராமரித்து நடாத்திய இதன்
தலைவராக திகழ்ந்த மௌலவி கே.கிதாயதுல்லாவுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்த நிகழ்வும் இடம்பெற்றது.









மன்னார் எருக்கலம்பிட்டி அரபுகல்லூரியிலிருந்து முதன்முதலாக 8 உலமாக்கள் ஷரீஆ கற்கை நெறி பூர்த்தி-படங்கள் Reviewed by Author on July 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.