அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-போசாக்கு மட்டத்தினை நடளாவியரீதியில் உயர்த்துவதற்கான விசேட செயலமர்வு....

நாடளாவிய ரீதியில் போசாக்கினை மேம்படுத்துவதற்கான பண்முகப்பட்ட துறைகளினூடாக செயற்திட்டத்தினை உருவாக்குதல் தொடர்பான செயலமர்வு இன்றைய தினம் மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் காலை 10.00 மணியளவில் ஆரம்பம் ஆனது

ஜனாதிபதி செயலகம் மற்றும் போசாக்கினை மேம்படுத்துவதற்கான மக்கள் அமைப்பின் ஒழுங்கமைபில் UNOPS மற்றும் WORLD VISION அமைப்புக்களின் நிதியுதவியுடன் நாடுபூராகவும் 2018 தொடக்கம் 2025 ஆண்டு காலப்பகுதிகளுக்கான செயற்திட்டம் ஒன்றை உருவாக்கி அதன் ஊடாக நாடளாவிய ரீதியில் மந்த போசாக்கு மட்டத்தை குறைத்து போசாக்கு மட்டத்தை அதிகரிக்கும் முகமாக குறித்த செயற்திட்டம் தொடர்பான மன்னார் மாவட்டத்தில் செயற்படும் அரச அரச சார்பற்ற சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகளின் பங்கு பற்றுதலின் கீழ் குறித்த செயலமர்வு இடம் பெற்றது

இவ் செயலமர்வில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதேச செயளாலர் வலயகல்வி கோட்டக்கல்வி பணிப்பாளர்கள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் திட்டமிடல் பிரிவு அதிகாரிகள் என பலரும் கல்ந்து கொண்டனர்.

குறித்த செயலமர்வின் மூலாமாக மாவட்ட ரீதியாக போசாக்கு மட்டத்தினை அதிகரிப்பினை ஊக்குவிப்பது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் மாவட்ட ரீதியில் செயற்படும் அமைப்புகளின் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளது

குறித்த ஆலோசனைகளை உள்ளடக்கிய செயற்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.







மன்னார்-போசாக்கு மட்டத்தினை நடளாவியரீதியில் உயர்த்துவதற்கான விசேட செயலமர்வு.... Reviewed by Author on August 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.