அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினை வேந்தல் அனுஸ்ரிப்பு-படங்கள்

தியாக தீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை 15/09/2019 காலை மன்னாரில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டின்,அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வின்  பொது தீபச்சுடரினை மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் ஏற்றி நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். 

அதனைத் தொடர்ந்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் தியாக தீபம் திலீபனின் படத்துக்கு மலர் மாலை அணிவித்தார்.

மேலும் அங்கு வந்திருந்தவர்களும்  திலீபனின் நினைவு படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மதத்தலைவர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் உயிரிழந்த போராளிகளின் உறவுகள்,  என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.












மன்னாரில் தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினை வேந்தல் அனுஸ்ரிப்பு-படங்கள் Reviewed by Author on September 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.