அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தாழ்வுபாடு வரலாற்று சிறப்பு மிக்க புனித சூசையப்பர் வாசகப்பா நிகழ்வு-படங்கள்

மன்னார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாழ்வுபாடு புனித சூசையப்பர் வாசப்பு நிகழ்வு அருட்தந்தை ஜேசுராஜாவின் ஏற்பாட்டில் அன்னாவியார் கிறிஸ்ரியன் டயஸ் தலைமையில்  மாலை 6 மணி தொடக்கம் நண்பகல் 3 மணிவரை தாழ்வுபாடு புனித வளனார் பாடசாலையில் இடம் பெற்றது.

சுமார் 100 வருடங்களுக்கு முற்பட்ட தென்மோடி கூத்து பாங்கில் தாழ்வுபாட்டு பங்கு மக்களால் நடத்தப்படும் குறித்த வாசப்பபு நிகழ்வு நான்கு வருடங்களுக்கு பின்னர் இன்றைய தினம் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை வன்னிபாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் பிரதேச செயலாளர் கனகாம்பிகை சிவசம்பு மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹீர் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்தர் ராதா பெர்னாண்டோ அருட்தந்தையர்கள் அருட்சகோதரர்கள் அருட்சகோதரிகள் பங்கு மக்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

குறித்த வாசகப்பா நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு இன்று நாள்ளிரவு தொடக்கம்  இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















மன்னார் தாழ்வுபாடு வரலாற்று சிறப்பு மிக்க புனித சூசையப்பர் வாசகப்பா நிகழ்வு-படங்கள் Reviewed by Author on September 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.