அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 'நிலைமாறு கால நீதி' தொடர்பில் இளையோருக்கு விழிர்ப்புணர்வு-படங்கள்

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் யூ.எஸ்.ஐ.டி.இ.ஏ அமைப்பின் அனுசரனையுடன் 'நிலைமாறு கால நீதி' தொடர்பில் மன்னார் மாவட்ட இளையோருக்கு தெழிவு படுத்தும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் தனியார் விடுதியில் இடம் பெற்றது.

'நிலை மாறுகால நீதிக்காய் இளைஞர்களின் குரல்' எனும் தொனிப்பொருளில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் ஏ.மேரியன் குரூஸ் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது விருந்தினர்களாக மன்னார் மாவட்ட தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற அதிகாரி ரீ.பூலோகராஜா,வவுனியா மது வரி திணைக்கள அத்தியட்சகர் செந்தூர் செல்வன்,தொழில் பயிற்சி அதிகார சபையின் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.சிவபாலன் மற்றும் இளைஞர் சேவை அலுவலகர்கள் கலந்து கொண்டு இளையோருக்கு நிலைமாறு கால நீதி தொடர்பாக விளக்கமளித்தளர்.

இதன் போது கலந்து கொண்ட இளையோர்களினால் விழிர்ப்புணர்வு நிகழ்வும் அரங்கேற்றப்பட்டது.

குறித்த நிகழ்வில் மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு ஆகிய நான்கு பிரதேசச் செயலாளர் பிரிவுகளையும் சேர்ந்த சுமார் 50 இற்கும் மேற்பட்ட இளையோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






மன்னாரில் 'நிலைமாறு கால நீதி' தொடர்பில் இளையோருக்கு விழிர்ப்புணர்வு-படங்கள் Reviewed by Author on October 31, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.