அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மக்கள் மழை வெள்ளத்திலும் தீபாவளி கொண்டாட்டத்தில்-படங்கள்

தீப ஒளி திருநாளை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மக்கள் அனைவரும் தீப ஒளி திருநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் மாவட்ட ரீதியாக உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் தீர்த்த அபிசேகங்களும் இடம் பெற்றது.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் பாடல் பெற்ற திருத்தளமான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் தீபாவளி சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதுடன் விசேட ஆராதனைகளும் இடம் பெற்றது.

குறித்த விசேட பூஜை வழிபாட்டின் பின்னர் பக்தர்களுக்கான ஆசி நிகழ்வும் இடம் பெற்றது.

அதே நேரத்தில் கேதார கௌரி விரதத்தில் 21 நாட்கள் ஈடு பட்ட அனைவரும் இன்றைய தினம் காப்பு கட்டி தங்களுடைய வழிபாடுகளை மேற்கொண்டமை குறிப்பிடதக்கது.





மன்னார் மக்கள் மழை வெள்ளத்திலும் தீபாவளி கொண்டாட்டத்தில்-படங்கள் Reviewed by Author on October 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.